வார்த்தை மாண்பு :
புதியதாய் தொடங்கப்பட்ட அந்த ஜனரஞ்சக பத்திரிக்கையின் Chief Editor சீறியபடி Sub editor ரூமுக்கு வந்தார்.
" யோவ். என்னய்யா எழுதிருக்க ? இப்படிதான் ஆபாசமா திரிச்சி எழுதுவியா ஒரு செய்திய ? decent டா எழுத தெரியாதா ?...என்னய்யா பத்திரிக்கைகாரன் நீ ?..உனக்கெல்லாம் பத்திரிக்கை தர்மம் தெரியுமா தெரியாதா ?? "
"சாரி சார்....நீங்க எத சொல்றீங்கன்னு தெரியல....எது சார்.? " படபடத்தார் சப் எடிட்டர் .
இதொ இது தான் யா
" 1. ஹோட்டலில் விபச்சாரம் செய்த விபச்சாரிகள் கைது.. விபசாரத்திற்கு அழைத்தபோது போலீசிடம் பிடிபட்டனர்.
2. சீரியல் சைடு ஆக்டர் தற்கொலைக்கு முயற்சி "
"சார்...அது வந்து நான் புதுசு...அது வந்து "
சரி விடு...நான் கரெக்ட் பண்ணிட்டேன்.இந்தா இந்த ப்ரூப் ல இருக்கிற மாதிரி போடு
" 1. ஹோட்டலில் 'தொழிலில்' ஈடுபட்ட 'அழகிகள் ' கைது. 'உல்லாசமாய் ' இருக்க வாலிபரை அழைத்தபோது போலீஸ் வலையில் சிக்கினர்.
2. பிரபல நடிகர் தற்கொலை முயற்சி.பரபரப்பு தகவல்கள் "
சரி சார்....தங்க யு சார்...
" ஹ்ம்ம் ஹ்ம்ம் இருக்கட்டும் இருக்கட்டும்...அப்புறம் தினம் தினம் தினத்தந்தி படிச்சி பழகனும்..ஓகே வா ?..அப்போதான் இந்த மாதிரி சரியான வார்த்தை பிரயோகம் வரும்."
No comments:
Post a Comment