ஏதோ நாங்க எல்லாம் ரத்தவெறி பிடிச்சி அலையிற மாதிரி சிலர் சொல்றாங்க..
எந்த தண்டனைக்கு இல்லாட்டியும் இந்த ரேப் க்கு தூக்கு தண்டனை வேணும் என்பது என்னோட விருப்பம்.
உயிர்கொலை அது இது ன்னு சொல்லுற ஆட்கள் சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லுங்க . பிடிக்காதவங்க ப்ளாக் பண்ணிடுங்க
1. இந்திய ராணுவம் வேறு ஒரு நாட்டின் மீது போர்தொடுக்கும் நேரங்களில் எல்லாம் எக்கச்சக்க அண்டை நாட்டு வீரர்கள் சாவார்கள்.. அவர்களில் எவனும் ரேப், கொள்ளை போன்ற குற்றங்களில் ஈடுபட்டது கிடையாது ..அப்போது உயிரின் மதிப்பு குறித்து உங்கள் நல்ல எண்ணங்கள் எல்லாம் எங்கே போனது ?...உயிர் என்றால் எல்லாமே ஒன்னுதானே ?..அப்போது நீங்கள் இராணுவமே கூடாது என்று சொல்ல துணிவீர்களா ??
அண்டை நாட்டுக்காரன் நல்லவனாய் இருந்து செத்தாலும் பரவா இல்லை, ஆனால் சொந்த நாட்டில் அயோக்கியத்தனம் பண்ணிய பொறம்போக்கு பாடுகள் சாவதில் தான் கருணை உணர்வு அழிக்கப்பட்டுவிட போகிறதா ?
2. "எப்படியும் தூக்கு தண்டனை கிடையாது. ஒரு 18 வருஷம் வச்சிருந்துட்டு விட்ருவாங்க ".. இந்த ஒரு எண்ண ஓட்டம் இருப்பதனால் தான் சில பொறம்போக்குகள் " ஜாதிக்காக அவன வெட்டிட்டு நான் போவேண்டா ஜெயிலுக்கு " என்று வீர வாசன் மயிரு வசனம் எல்லாம் பேசிகிட்டு திரியுதுகள்...தூக்கு தண்டனை என்று ஒன்று இருந்தால் இந்த நாய்கள் இப்படி பேசுமா ?...தங்கள் கருத்து என்ன ?
3. சரி, ரேப் பண்ண நாய்களை ( நாய்கள் சமுதாயம் என்னை மன்னிக்கவும் ) வெளியே விட்டுட்டோம் . அல்லது மன்னிப்பு குடுக்காம ஆயுள் தண்டனை குடுக்குறோம்னு வச்சிப்போம்.. வெளிய வர்றவன் என்ன மகாத்மாவா மாறி தான் வர்றான என்ன ?. ஒரு வக்கிரமான மனதை , கொலை செய்ய துணியும் மனதை எல்லாம் அன்பால் திருத்தி 4 std Moral Science கிளாஸ் எடுக்க யார் வருவார்கள் ?.
அந்த நாய்களை உங்கள் வீட்டில் ஒரு மகனாகவோ, அல்லது மருமகனாகவோ ஏற்றுக்கொள்ள எத்தனைபேர் தயார் ?... பெண் குழந்தை உள்ளவர்கள் பதிலளிக்கலாம்.
4. "கொல்லுவதால் எந்த நிலைமையும் மாறப்போவது இல்லை "
ரொம்பவே கடுப்பேத்தும் வசனம் இது தான். ..நன்றாக யோசித்துப் பாருங்கள்...ஒரு கற்பழிப்பு சம்பவம் நடந்த பின் " சனி பொணம் தனியா போகாது " என்ற கதை போல் தொடர்ச்சியாக பல கற்பழிப்பு, பாலியல் கொலைகள் நடக்கும்.. காரணம் என்ன ?...இந்த மயிரான் எல்லாம் செய்யுற வேலைக்கு பின்னாடி ஒரு வித Guilt Pleasure இருக்கிறது..ஏதோ யாருமே செய்யாத தவறை நான் செய்கிறோம் ன்னு ஒவ்வொரு ரேப்பிச்ட்டுகளையும் பெருமையாக பீல் பண்ண வைக்கும் கொடூர மன உணர்வு. எங்கோ நடக்கும் ஒரு பரபரப்புக்கு நாம் காரணமாய் இருக்கிறோம் ன்னு அந்த ஆட்களை நினைக்க வைக்கும் ஒரு மனநிலை.
ஒரே ஒருவாட்டி கொன்னு பாருங்க... பரதேசி நாய்ங்க பொச்ச சாத்திக்கிட்டு கம்முனு இருக்கும்.
அன்பால சாதிக்க முடியாத சில விஷயங்களை பயம் சாதிக்கும்.
5. ஒரு காம்பவுண்டு சுவர் பிரச்சனைக்கு , 500 ரூபா குடுக்கல் வாங்கல் பிரச்சனைக்கு எல்லாம் நம்மளால பக்கத்துக்கு வீடுகாரன்கிட்டயோ அல்லது சொந்தகாரன்கிட்டயோ பகமை. பாராட்ட முடியுது....ஆனா தப்பு பண்ணவன் கிட்ட மட்டும் நாங்கள் அன்பை காட்டுவோம், அவனுக்கு லா லா லா ன்னு விக்ரமன் பாட்டு பாடி அவனை திருத்துவோம் ன்னு சொல்றது காமெடியா தெரியலையா ?....எல்லாருமே பல்லாண்டு வாழ்க படத்து எம். ஜி.ஆர் இல்லையே.....
6. இவ்ளோ பேசுற ஆட்கள், ஏன் நரகாசூர வதம் , ராவண வதத்தை எல்லாம் கொண்டாடனும் ?..ராவணன் சீதைய ரேப் பண்ணிட்டதா கம்பராமாயணம் சொல்லுதா ?... ரேப்பே பண்ணாத ஒருத்தவனுக்கு உங்கள் கடவுள் குடுத்த தண்டனை சரியா ?... இப்போது மரண தண்டனையை மறுதளிக்கிரீர் என்றால் நீங்கள் ராமனை எதிர்ப்பவர் என்று எடுத்துக்கொள்ளலாமா ?...
7. கடசியா நான் கேக்குறது ஒன்னே ஒண்ணுதான்....புது இல்ல... " நான் சிவப்பு மனிதன் " படத்துல பாக்யராஜ் ஜட்ஜ் பொண்ண ரேப் பண்ணுற மாதிரி பாவலா காட்டுவார். அப்போது ஜட்ஜ் எடுக்கும் ஆயுதம் துப்பாக்கி...அப்போ பாக்யா சில நியாயங்களை எல்லாம் கேப்பார் ..அது எல்லாம் உங்களுக்கு தெரியும் என்று நெனைக்கிறேன்.
நான் கேட்க விரும்புவது ஒன்னே ஒன்னு தான்.. உங்கள் தாயோ, பாட்டியோ , 2 வயது குழந்தையோ உங்கள் கண்ணெதிரில் ஒரு 4 பேரால் வன்புணர்வு செய்யும்போது நீங்கள் எடுக்கு ஆயுதம் என்ன ?.
சட்டமா ?
வரவே வராத கடவுளா ?
இல்லை உங்கள் அருகில் கிடக்கும் உருட்டுக்கட்டையா ?
இதில் அதிசயமாய் இன்று சட்டமே உருட்டுக்கட்டையை எடுத்து இருக்கிறது. கரப்பான்பூச்சிகளை யார் அழித்தால் என்ன ?...சமூகம் சுத்தமானால் சரி தான்.
No comments:
Post a Comment