மிக பிரபல அந்த ஹீரோவின் கால்ஷீட்டை கஷ்ட்டப்பட்டு வாங்கிருந்த அந்த டைரெக்டர் டென்ஷனாய் இருந்தார். அந்த ஒல்லிபிச்சான் ஹீரோ ஒக்கார வைத்து அந்த படத்து ஹீரோயின் மேல் தான் கொண்ட காதலை கக்கிகொண்டு இருந்தான் .
யூனிட் ஆளுங்களையும் புடிச்சி கதை சொல்லிக்கொண்டு இருந்ததால் ஒலக கடுப்பில் இருந்தார் டைரெக்டர் .
"என்னதான் நான் பெரிய ஹீரோவா இருந்தாலும் எனக்கு அவள புடிச்சிருக்கு ப்ரோ "
"வாஸ்தவம் தான் சார் , பெரிய ஹீரோ உங்களுக்கு புடிக்கிதுனா அது என்ன சும்மாவா "
"சும்மா இல்ல ப்ரோ , தெய்வீக காதல் "
"ஆமா ஆமா, அழகான பொண்ணுமேல தெய்வீக காதல் வராட்டி எப்படி ??...வாஸ்தவம் தான் சார் "
"நிலா மாதிரி அவ முகம் இருக்கே ப்ரோ.....அது " என்று ஹீரோ ஹீரோயினின் முக அழகை சொல்லிமுடிக்கும்முன் ,
"கார்ர்ரர்ர்ர்ரர் த்த்த்த்த்த்த்தூ " என்று எவனோ கத்தினான்.
"டேய் எவண்டா அவன், எவண்டா அவன் ?? " என்று யூனிட்டை பிரிச்சி மேய்ந்துகொண்டிருந்தார் ஒ.பி ஹீரோ.
"த்தா! இந்த மேக் அப் மேன் பொறம்போக்குக்கு எந்த நேரத்துல டென்ஷன் ஆவுரதுன்னு ஒரு வெவஸ்தையே இல்ல . நான் பொறுத்துக்கினு கேக்கல கம்முனு ?... ..." என்று மனதில் பொங்கிக்கொண்டு இருந்தார் டைரக்டெர் .
No comments:
Post a Comment